இலங்கை செய்தி

லத்வியா எல்லையில் ஐந்து இலங்கையர்கள் கைது!

லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏனைய 06 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கைது செய்யப்பட்ட 05 இலங்கையர்கள் மீதும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

லத்வியா குடியரசின் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டியவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்படும் இலங்கையர்களுக்கு இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!