அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – செயற்கை நுண்ணறிவுடன் களமிறங்கும் iPad Pro

Apple நிறுவனம் புதிய ரக iPadகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அதில் செயற்கை நுண்ணறிவு சில்லு பொருத்தப்பட்டுள்ளது.

iPad Pro எனும் புதிய iPadஇல் M4 எனும் ஆற்றல்மிக்க செயற்கை நுண்ணறிவு சில்லு பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது Apple தயாரிக்கும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் சில்லைவிட அது சக்திவாய்ந்தது என்று நிறுவனம் கூறியது.

அந்தச் சில்லு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூடுதலான பணிகளைச் செய்யக்கூடியது என்றும் நிறுவனம் சொன்னது.

நிறுவனம், அது தயாரிக்கும் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யத் தயார் என்பதற்கான அறிகுறியாக இந்தச் செயல் கருதப்படுகிறது.

iPad Pro, iPad Air இரண்டு ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்படுகின்றன.

இதுவரை தயாரிக்கப்பட்ட iPadகளில் iPad Pro ஆக ஆற்றல்மிக்கது என்று Apple குறிப்பிட்டுள்ளது.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி