இலங்கை செய்தி

வவுனியாவில் கணவன் மனைவி சடலங்களாக மீட்பு

வவுனியா நெடுங்கேணி கிரிசுட்டான் பகுதியில் உள்ள இரு வீடுகளில் கணவன் மனைவி இருவரின் சடலங்களை நெடுங்கேணி பொலிஸார் நேற்று (02) மாலை கண்டெடுத்துள்ளனர்.

பிரதான வீட்டில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடையவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவரது 37 வயதான மனைவியின் சடலம் பிரதான வீட்டில் இருந்து சற்று தள்ளி வேறொரு வீட்டில் காணப்பட்டது.

இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக அயலவர்கள் நெடுங்கேணி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த கணவனின் கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், மனைவியின் உடலில் விஷ வாசனை வந்துள்ளதுடன், மனைவி கணவனை வெட்டிவிட்டு விஷம் அருந்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நெடுங்கேணி பொலிஸார் இருவரது சடலங்களையும் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content