இலங்கை : பேலியகொடவில் 25 பெண்கள் அதிரடியாக கைது : தொடர்பில் இருந்தவர்களுக்கும் சிக்கல்!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் 25 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் கோனோரியா, ஹெர்பெஸ் போன்ற சமூக நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அவதானமாக இருக்குமாறும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனைக்காக தவறான தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)