ஆசியா

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டாக்சி – ஐவர் பலி, ஒருவர் மாயம்!

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது” என்றார்.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!