இலங்கை

பிரேத பரிசோதனையின் போது நபர் ஒருவரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட பல்!

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது 59 வயதுடைய நபரொருவரின் நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் சில காலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார்.

பலாங்கொடை பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பகுதியைச் சேர்ந்த எஸ். கருணாரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

அந்த நபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், நிமோனியா நோய் தீவிரமடைந்ததால் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சில வருடங்களுக்கு முன்னர் அவரது வாயிலிருந்து பல் ஒன்று விழுந்து, அது நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!