இலங்கை – சீனா இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கியான் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என சீன பிரதமர் லீ கியான் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





