உலகம்

இந்திய தேர்தல் : 60 சதவீதமான வாக்குகள் கிடைக்கும் – வெங்கடேசன் உறுதி!

மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் திகதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் திகதி நடைபெறுகிறது.

இந்நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

INDIA கூட்டணி சார்பில் திமுக மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் மதுரை வேட்பாளராக சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இன்று அதிகாலையே தேர்தலுக்கான பணியை துவங்கி விட்டார் சு.வெங்கடேசன். அதன்படி மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் உள்ள தியாகி பாலு அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்து பேசுகையில், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும், மதுரையில் குறைந்தபட்சம் 60% வாக்கு தங்களுக்கு தான் பதிவாகும், மதுரையில் தாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!