ஆசியா

புக்குஷிமா அணு ஆலையை அவசரமாக மூடிய ஜப்பான்!

ஜப்பான் அரசாங்கம் புக்குஷிமா அணு ஆலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் புக்குஷிமா அணு ஆலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புக்குஷிமா வட்டாரத்தின் வடகிழக்கில் 5.8 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அவ்வாறு செய்யப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டு அந்தப் பகுதியைச் சுனாமி தாக்கியது. இம்முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதே நேரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட புக்குஷிமா Daiichi ஆலையிலோ புக்குஷிமா Daini ஆலையிலோ எவ்விதச் சேதமும் இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!