சீனாவில் சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சீனாவில் கடந்த ஆண்டில் சைபர் க்ரைம், இது தொடர்பான கைதுகள் பாரிய அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக மோசடி உட்பட கணினி குற்றங்களின் எண்ணிக்கை 2023 இல் 36.2% உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூர்மையான அதிகரிப்பு, எல்லை தாண்டிய கணினி மோசடியை இரட்டிப்பாக்குவதைப் பிரதிபலிக்கிறது, இதன் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள், மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் 47 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 17.3 வீதமானோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)