இலங்கை செய்தி

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கனேஷராஜா முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையின் போது இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

இலங்கை தமிழர் கட்சி கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி திருகோணமலை சாம்பல்தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரம் பரா என்பவரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசா ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர்களின் தெரிவுகளை இரத்து செய்ய உடன்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

See also  சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

மேலும் கட்சியினுடைய நலன் கருதி சில முடிவுகளை எடுக்க வேண்டி இருந்ததாகவும் சமூகத்துக்கு போடப்பட்ட வழக்கு என்ற படியாலும் கட்சிக்கு எதிராக போடப்பட்ட வழக்கு என்ற படியாலும் அவர்கள் சமர்ப்பித்த சமர்ப்பணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை எனவும் வழக்கை நீடித்து கொண்டு சென்றால் சமூகத்துக்கு செய்யும் துரோகம் எனவும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் எனவும் கருதி நாங்கள் இவ்விடத்தில் உடன்பாட்டிற்குள் வந்ததாகவும் சட்டத்தரணி தவராசா இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் போது இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்,இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தலைவர் சண்முகம் குகதாசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content