ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பல் சிகிச்சைக்காக செல்லும் மக்களுக்கு முக்கிய தகவல்

ஜெர்மனியில் பல் வைத்தியர்கள் பாவித்து வருகின்ற இரசாயன பொருளை பாவிக்க கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது பற்களில் துளை ஏற்பட்டு இருந்தால் அதை மூடுவதற்கு அமல்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு ரசாயன பொருளை பல் வைத்தியர் பயன்படுத்துகின்றார்கள்.

இந்நிலையில் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியமானது இந்த அமல்கம் என்ற சொல்லப்படுகின்ற இரசாயன பொருட்களை பற்களில் துளை ஏற்படும் பொழுது அதனை அடைப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ்வகையான ஒரு முடிவுக்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதலில் இருந்து அமுல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த அமல்கம் என்று சொல்லப்படுகின்ற இந்த ரசாயன பொருட்களானது இதுவரை காலமும் 15 வயதுக்கு உட்பட்ட மகப்பேற்றை எதிர்ப்பார்த்து இருக்கின்ற தாய் மார்களுக்கு பயன்படுத்த கூடாது என்பது சட்டமாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இரசாயன பதார்த்தமானது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமான விளைவை ஏற்படுத்த கூடியது என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகின்றது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content