வவுனியா மாவட்ட கூட்டத்தில் தனிச்சிங்களம்: ரவிகரன் எம்.பி. கடும் சீற்றம்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒழுங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (26) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் […]













