இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது!

  • September 29, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன இன்று (29) காலை வாக்குமூலம் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்தபோது கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கொழும்பில் சமீபத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, ​​கோட்டை காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகும் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

ஐரோப்பா

ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அனைத்து சிவிலியன் ட்ரோன்களுக்கு தடை செய்த டென்மார்க்

  • September 29, 2025
  • 0 Comments

கோபன்ஹேகனில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களின் கூட்டத்தைப் பாதுகாக்கவும், சந்தேகத்திற்கிடமான ட்ரோன் காட்சிகள் அதிகரித்து வருவதால், காவல்துறை மீதான சுமையைக் குறைக்கும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை நாடு தழுவிய அனைத்து சிவிலியன் ட்ரோன் விமானங்களை தற்காலிகமாக தடை செய்வதாக டென்மார்க் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இத் தற்காலிகத் தடை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நீடிக்கும், மேலும் அதிகாரிகள் உச்சிமாநாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வேளையில், சட்டப்பூர்வ விமானங்களுக்கும் மற்றும் […]

பொழுதுபோக்கு

ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் 3ஆம் இடம் பிடித்த அஜித் அணி

  • September 29, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணி 3 ஆம் பிடித்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது. தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டார். இந்த நிலையில், நேற்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் […]

மத்திய கிழக்கு

‘ஸ்னாப்பேக்’வழிமுறை தூண்டப்பட்ட பின்னர்,ஈரானுக்கு எதிராக டஜன் கணக்கான தடைகளை மீண்டும் விதித்துள்ள UN

  • September 29, 2025
  • 0 Comments

மூன்று ஐரோப்பிய நாடுகள் “ஸ்னாப்பேக்” பொறிமுறையைத் தொடங்கியதை அடுத்து, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மீட்டெடுத்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எதிராக ஐ.நா. டஜன் கணக்கான தடைகளை மீண்டும் விதித்தது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 2015க்கு முன்பு பட்டியலிடப்பட்ட 43 தனிநபர்கள் மற்றும் 78 நிறுவனங்களை இந்த தடைகள் குறிவைத்தன. ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் 30 நாட்களுக்குள் தடைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் […]

பொழுதுபோக்கு

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

  • September 29, 2025
  • 0 Comments

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ஓவியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜய்யைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார். இதனைக் கண்ட த.வெ.க. […]

தமிழ்நாடு

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

  • September 29, 2025
  • 0 Comments

தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுவரொட்டியில், அதில் தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில் அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

விஜய் நடத்திய கூட்டத்தில் கயாடு லோஹரின் நண்பர் மரணம்?

  • September 29, 2025
  • 0 Comments

நேற்று கரூரில் விஜய் நடத்திய அரசியல் பிரச்சார கூட்டத்தில் நடந்த நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்து  இருக்கின்றனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள். இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று வைரல் ஆனது. தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் இறந்துவிட்டார் எனவும், விஜய் சுயநல அரசியல் செய்கிறார் என தாக்கியும் அந்த பதிவு இருந்தது. இந்நிலையில் கயாடு லோஹர் இது பற்றி விளக்கம் கொடுத்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagramஇல் புதிய மாற்றங்கள் அறிமுகம்

  • September 29, 2025
  • 0 Comments

பிரபல சமூக ஊடகத்தளமான Instagramஇல் புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகிய காணொளி, குறுஞ்செய்தி அனுப்பும் வசதியில் மாற்றம் வருகிறது. செயலியைத் திறந்தவுடன் இரண்டு அம்சங்களையும் காணும் வசதியை எதிர்பார்க்கலாம். Instagram முன்பு புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கு அதிகமாகப் பயன்பட்டது. இப்போது காணொளி பிரபலமாகிவிட்டது. மாதந்தோறும் 3 பில்லியன் பேர் Instagram பக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். TikTok – Instagram போட்டி நீடிக்கிறது. இந்நிலையில் புதிய மாற்றங்கள் வருகின்றன. செயலியில் பிரபலமாக இருக்கும் வசதிகளை வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் […]

செய்தி

35 மணி நேரத்திற்கு பின்னர் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய்!

  • September 29, 2025
  • 0 Comments

கரூரில் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு செல்கிறார், கரூருக்கா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த சனிக்கிழமை கரூரில் இருந்து அவசர அவசரமாக சென்னை வந்த விஜய், இரவு சரியாக 11 மணிக்கு நீலாங்கரை வீட்டிற்குள் சென்றார். இந்த நிலையில் தற்போது அவர் எங்கு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு அவர் புறப்பட்டு […]

தமிழ்நாடு

சதி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை – கோபமடைந்த கனிமொழி எம்.பி

  • September 29, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நெரிசலில் 40 பேர் உயிரிழந்து, 111 பேர் படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துவிட்டு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்தது […]

error: Content is protected !!