புனித பாப்பரசர் போப்பின் இறுதி சடங்கு – புகைப்படம் எடுப்பதற்கு தடை!
புனித பாப்பரசர் போப் பிரான்ஸிஸ் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதை புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் போப்பின் படங்களையும் வீடியோக்களையும் வெறுப்பூட்டும் வகையில் வெளியிட்டதை தொடர்ந்து மற்ற யாத்ரீகர்கள் கோபமடைந்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போப்பின் உடலுக்கு 30 அடிக்குள், காவலர்கள் தங்கள் தொலைபேசிகளை ஒதுக்கி வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் அவற்றை பறிமுதல் செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது விசுவாசிகள் இப்போது வரிசையின் முன்பக்கத்தை அடையும்போது, அவர்கள் பிரான்சிஸை அமைதியான கண்ணியத்துடன் பார்வையிட வேண்டும் […]













