இரு முறை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியுள்ளது: இஸ்ரேல்
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வட காஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான முக்கிய சாலை ஒன்றை இஸ்ரேல் மூடியதாக பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டுவதைத் தொடர்ந்து அவ்வாறு நிகழ்ந்தது. கடந்த 15 மாதங்களாக காஸாவில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களில் மேலும் நால்வர் விடுவிக்கப்பட்டனர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இஸ்ரேல் 200 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது. ஆனால், இஸ்ரேலிய பிணைக்கைதி ஆர்பெல் யெஹுட்டை […]













