திடீரென தீப்பிடித்த தென் கொரிய விமானம் – 176 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்
தென் கொரியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தின் பின்புறப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அதில் இருந்த 176 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏர்பஸ் ஏ321 விமானம், தென்கிழக்கு பூசானில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்குப் பறக்கத் தயாராக இருந்தது, அப்போது திடீரென தீப்பிடித்தது என்று போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொத்தம் 169 பயணிகள் மற்றும் ஏழு விமானப் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக அமைச்சகம் […]













