உலகம்

கென்யாவில் பதற்ற நிலை : நாடாளுமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள்!

  • June 25, 2024
  • 0 Comments

கென்யாவில் சர்ச்சைக்குரிய வரி மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் நாடாளுமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் நைரோபியில் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டதாக துணை மருத்துவர் விவியன் அச்சிஸ்டா தெரிவித்துள்ளார். புதிய வரிகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் வாக்களிக்கக் கோரி செவ்வாய்கிழமை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். இருப்பினும் மக்களின் எதிர்புகளுக்கு மத்தியில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக மற்றொரு […]

இலங்கை

இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2024 – 2026 காலப்பகுதியில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையை மேற்கொள்ளும் பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும் வகையில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதற்காக 2017-2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் கூடியதாக 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். அதற்கமைய, உயர்கல்வித் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – பெருந்தடுப்பு பவளப்பாறைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும்: யுனெஸ்கோ

  • June 25, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் ‘பெருந்தடுப்பு (கிரேட் பேரியர்)‘ கடலடிப் பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) மரபுடைமைக் குழு ஆஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் கடலடிப் பாறைத்திட்டுகளைப் பாதுகாக்க மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்துத் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலியாவை யுனெஸ்கோ கேட்டுக் கொண்டது. ஆனால்,’பெருந்தடுப்பு (கிரேட் பேரியர்)‘ கடலடிப் பாறைத்திட்டுகளை அழியும் அபாயமுள்ள பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட மாட்டாது என்றும் வரைவு அறிக்கை ஒன்றில் […]

இந்தியா

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல்: அர்ச்சகர்கள் புகார்

கனமழை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கோவிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைநீர் வடிவதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார். பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் உள்ள தளத்தில் […]

ஆசியா

சீனாவில் பயன்பாட்டிற்கு வரும் அணுசக்தியால் இயங்கும் அடுத்த தலைமுறைகப்பல்!

  • June 25, 2024
  • 0 Comments

சீனாவின் நான்காவது துருவ ஆராய்ச்சி பனிக்கட்டி (icebreaker) கப்பலானது குவாங்சோவின் நான்ஷா மாவட்டத்தில் உள்ள இயற்கை வள அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த கப்பலானது மறுவிநியோகப் பணிகளுக்காக அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நியூக்ளியர் ஐஸ் பிரேக்கர்’ என அழைக்கப்படும் இந்த அரசுக்கு சொந்தமான கப்பல், ரஷ்யாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் வடக்கே உள்ள உறைந்த கடல்களை வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் அடுத்த தலைமுறை கப்பல்களில் சமீபத்தியதாகும். வட மற்றும் தென் துருவங்களில் உள்ள நாட்டின் […]

இலங்கை

பறவைக் காய்ச்சல்: இலங்கை சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு

பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை எந்த ஒரு சிறப்பு பொது சுகாதார அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. WHO எந்த பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு மற்றும் இலங்கை […]

ஐரோப்பா

எனது முன்மொழிவுகள் மூலம் உக்ரைனில் மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியும்; அதிபர் புதின்

  • June 25, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று(25), உக்ரைனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதையை தனது சமாதான முன்மொழிவுகள் வழங்குவதாக தெரிவுத்துள்ளார். சர்வதேச விவகாரங்களுக்கான அவரது உதவியாளர் யூரி உஷாகோவ் மூலம் ப்ரிமகோவ் ரீடிங்ஸ் ஃபோரம் பங்கேற்பாளர்களுக்கான உரையில் அவரது செய்தி தெரிவிக்கப்பட்டது. நாங்கள் முன்வைத்த முன்முயற்சியின் சாராம்சத்தைக் கூட ஆராய விரும்பாத பல மேற்கத்திய அரசியல்வாதிகளைப் போலல்லாமல், மன்ற பங்கேற்பாளர்கள் அதன் பரிசீலனையை சிந்தனையுடனும் பகுத்தறிவுடனும் அணுகுவார்கள் என்று நம்புகிறேன். கிரெம்ளின் […]

ஐரோப்பா

வருமானத்தில் ஒரு பகுதியை இழக்கப்போகும் பிரித்தானியர்கள் : எச்சரிக்கும் சுங்கத்துறையினர்!

  • June 25, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் HM வருவாய் மற்றும் சுங்கத் துறையினர் மக்களுக்கு அவசர கடிதம் ஒன்றை விநியோகித்துள்ளனர். அதாவது சில பெண்கள் தங்கள் வருமானத்தின் சில பகுதிகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏறக்குறைய 210,000 தனிநபர்கள், முக்கியமாக பெண்கள், மாநில ஓய்வூதியப் பிழையின் காரணமாக கணிசமான தொகையை இழக்கலாம் என சுங்கத் துறையினர் எச்சரித்துள்ளனர். 1978 மற்றும் 2000 க்கு இடையில் குழந்தை நலன் கோரிய 60 மற்றும் 70 களில் உள்ள பெண்களை இந்த பிரச்சினை […]

ஐரோப்பா

ரஷ்ய அதிகாரிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பிப்பு

உக்ரைனில் பொதுமக்கள் இலக்குகளைத் தாக்கியதற்காக ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதன் இராணுவத் தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செவ்வாயன்று கைது வாரண்ட்களை பிறப்பித்தது . முன்னாள் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் தலைமை அதிகாரி வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் பொது ஊழியர்களின் தலைவருக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்த […]

பொழுதுபோக்கு

மகளுக்காக 1,000 கோடிக்கும் மேல் கொட்டிக்கொடுத்த அர்ஜூன்… இதுதான் இப்ப ஹாட் நியுஸ்

  • June 25, 2024
  • 0 Comments

சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து கரம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன். ரொம்பவும் க்யூட்டாக இருந்த இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் மீடியாவே கலக்கியது. அதை தொடர்ந்து அர்ஜுன் திரையுலக பிரபலங்களுக்காக பிரம்மாண்ட திருமண வரவேற்பு ஒன்றையும் நடத்தினார். அதில் தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதையடுத்து […]

error: Content is protected !!