இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – தமிழகம் கப்பல் சேவை மீளவும் ஆரம்பம் – திகதியும் அறிவிப்பு

  • April 28, 2024
  • 0 Comments

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் […]

இலங்கை செய்தி

யாழ்.சாவகச்சோியில் பாடசாலை மாணவியை காணவில்லை

  • April 28, 2024
  • 0 Comments

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக நேற்றைய தினம் சனிக்கிழமை வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து […]

இலங்கை செய்தி

இலங்கையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அறுவை சிகிச்சை

  • April 28, 2024
  • 0 Comments

நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான சத்திரசிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

உமா ஓயா திட்டத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து நாளை ஆய்வு

  • April 28, 2024
  • 0 Comments

உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை விசேட அவதானத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் வகையில், மலையகத்தில் அதிகளவு தேங்கும் நீரை குறுகிய கால முறைகள் மூலம் கீழே இறக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். தற்போது, ​​எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு […]

ஆஸ்திரேலியா செய்தி

இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற முயன்றசி! அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரபரப்பு

  • April 28, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் – சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி இலங்கைக்கு வரவிருந்த விமானத்தின் சரக்கு பிரிவில் நபர் ஒருவர் நுழைந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிட்னி சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஆய்வுப் பகுதி வழியாக ஒருவர் ஓடியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் 30 வயதுடையவர் என கூறப்படுகிறது. சந்தேக நபரை கைது செய்த பின்னர், அவர் சிகிச்சைக்காக அனுப்பி […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் பிரதமர் IMF தலைவருடன் புதிய கடன் திட்டம் குறித்து கலந்துரையாடல்

  • April 28, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் புதிய கடன் திட்டம் பற்றி விவாதித்ததாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரியாத்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய $3 பில்லியன் காத்திருப்பு ஏற்பாடு இந்த மாதம் காலாவதியான பிறகு, இஸ்லாமாபாத் நிதியுடன் புதிய, பெரிய நீண்ட கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஒப்பந்தத்தை நாடுகிறது. “கடந்த […]

இலங்கை செய்தி

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது

  • April 28, 2024
  • 0 Comments

மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தினால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது, ​​குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வர்த்தகர் கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 64 வயதுடையவர் என்பதுடன் தாய்லாந்தின் பாங்கொக் செல்லும் தாய் எயார்லைன்ஸ் TG-308 விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு கடமையாற்றிய குடிவரவு அதிகாரி அவரின் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்காக மனைவியை கொன்ற கணவர்

  • April 28, 2024
  • 0 Comments

அமெரிக்கா-கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியைக் கொன்று, அவரது காப்பீட்டுத் தொகையைப் பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, $2,000 (₹ 1,66,805) மதிப்புள்ள லைஃப் சைஸ் செக்ஸ் டால் ஒன்றை வங்கியுள்ளார். 2019 இல் Colby Trickle, 911 என்ற எண்ணை அழைத்தார், அவரது 26 வயது மனைவி Kristen Trickle, கன்சாஸ், ஹேஸில் உள்ள தங்கள் வீட்டில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறினார். விரைவில், ஹேஸ் காவல் துறை அதிகாரி ஒருவர் குற்றம் நடந்த […]

ஆசியா

போர்நிறுத்த பேச்சுவார்த்தை: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு கத்தார் விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேலிய ஊடகங்களுடனான நேர்காணல்களில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் “அதிக அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தன்மையை” காட்டுமாறு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரையும் கத்தாரின் மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார் . மேலும், ஒவ்வொரு தரப்பும் அரசியல் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துள்ளன, பொதுமக்களின் நலனை மனதில் கொண்டு அல்ல என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார். “இரு தரப்பிலும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால், நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தான் […]

செய்தி விளையாட்டு

IPL Match 45 – பெங்களூரு அணி அதிரடி வெற்றி

  • April 28, 2024
  • 0 Comments

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் […]

error: Content is protected !!