இலங்கையில் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்யும் வர்த்தமானி மீள பெறப்பட்டது!
கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி மய்யத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி […]













