ஐரோப்பா செய்தி

விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

  • December 27, 2023
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்கவுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. “இன்றிரவு, இந்திய வெளியுறவு மந்திரி திரு ஜெய்சங்கரை வரவேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். திரு பெஸ்கோவ், உயர்மட்ட இந்திய இராஜதந்திரி ஏற்கனவே தனது ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவை சந்தித்ததாக குறிப்பிட்டார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, இந்தியா ரஷ்யாவின் […]

ஆசியா செய்தி

ஐநா தடைகளை ஆண்டு இறுதி கூட்டத்தில் பங்கேற்ற வட கொரிய அதிகாரிகள்

  • December 27, 2023
  • 0 Comments

நாட்டின் உயரடுக்குகளை ஒன்று சேர்ப்பதற்காக வட கொரிய உயர் அதிகாரிகள் இந்த வாரம் விலையுயர்ந்த ஆண்டு இறுதிக் கூட்டத்தை நடத்தினர். தென் கொரிய செய்தி நிறுவனம், வட கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு, புதிய ஆண்டிற்கு வழிவகுக்கும் கொள்கைகளை மதிப்பாய்வு செய்ய பியாங்யாங்கில் கூடியது. நாட்டில் ஆடம்பரப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் ஆடம்பரமான Mercedes S- வகுப்பு வாகனங்களில் வந்தனர். வடகொரியாவிற்கு சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடைகளை […]

இலங்கை

யாழில் மாபெரும் மார்கழி இசை விழா ஆரம்பம்

மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. வர்த்தகக் கண்காட்சியானது இன்று புதன்கிழமை(27) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மார்கழி 27, 28, 29ம் திகதிளில் மாலை 4.45 முதல் இரவு 9.15வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைவிழாவும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் இந்தியத்துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து யாழ் […]

பொழுதுபோக்கு

நியூயோர்க்கில் ஓடியது யாருடன்? வைரலான வீடியோவின் உண்மையை கூறினார் விஷால்

  • December 27, 2023
  • 0 Comments

விஷால், வெகேஷனுக்காக… நியூயோர்க் சென்றுள்ள நிலையில் அங்கு ஒரு பெண்ணுடன் நடந்து செல்ல, யாரோ சிலர் அவரை கண்டுபிடித்து வீடியோ எடுப்பது போன்றும்… அதை நோட் செய்த பின்னர் விஷால் மூஞ்சை மறைத்து கொண்டு ஓடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. ரசிகர்க பலர் இது உண்மையான விஷால் தானா? என சந்தேகமாக கேள்வி எழுப்பி வந்த நிலையில்… அந்த பெண் தான் விஷாலின் புதிய காதலியா? என்கிற கேள்விகளும் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டன. […]

இலங்கை

மாவீரர் தினத்திற்கு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஆடை அணிந்த இளைஞன் பிணையில் விடுதலை

மாவீரர் தினத்தில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு புலிச் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்று புதன்கிழமை இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது குறித்த இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமாஅதிபர் திணைக்களம் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் […]

இந்தியா செய்தி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தற்காலிக குழு நியமனம்

  • December 27, 2023
  • 0 Comments

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்திய மல்யுத்த சங்கத்தை இடைநீக்கம் செய்ய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை […]

இலங்கை

மட்டு. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் மற்றும் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • December 27, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் […]

உலகம்

நைஜீரியாவில் தொடரும் பதற்றம்: 140 போ் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பழங்குடியின குழுக்களிடையே கடந்த 2 நாள்களாக நடந்து வரும் மோதலில் 140 போ் உயிரிழந்துள்ளனர் . பிளேட்டூ மாகாணத்தின் பல்வேறு தொலைதூர கிராமங்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தவா்கள் அங்கிருந்தவா்கள் மீது கடந்த 2 நாள்களாக தாக்குதல் நடத்தினர். இதில் சுமாா் 140 போ் உயிரிழந்ததை சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டா்நேஷனஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், கால்நடைகளை மேய்க்கும் நாடோடி […]

இலங்கை

யாழ். உடுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய அலங்கரிக்கப்பட்ட மர்ம ரதம்

  • December 27, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27) கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.

உலகம்

9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள லிபியா பங்குச்சந்தை…

  • December 27, 2023
  • 0 Comments

லிபியா பங்குச்சந்தை நேற்றிலிருந்து வர்த்தகத்தை தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த லிபியா ஷேர் மார்க்கெட் இப்போது மீண்டும் வர்த்தகத்தை தொடங்கியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக லிபியா பங்குச் சந்தை கடந்த 9 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் லிபியா பிரதமர் அப்துல் ஹமீது அல்-டெபய்பாவும், பங்குச்சந்தை இயக்குநர்களின் வாரியத் தலைவர் பஷீர் முகமது அஷௌரும் இணைந்து நாட்டின் தலைநகரான திரிபோலியில் உள்ள பங்குசந்தையில் மணியடித்து நேற்று வர்த்தகத்தை […]

error: Content is protected !!