இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்றம்: மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • September 28, 2023
  • 0 Comments

மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்கு திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்ணிப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் பல்வாலை முன்கூட்டியே அவரது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில் அவர் பணியாற்ற முடியும் என்று […]

ஆசியா

டெங்கு காய்ச்சலால் தத்தளிக்கும் பங்களாதேஷ் : 1,000 கடந்துள்ள இறப்புக்களின் எண்ணிக்கை

  • September 28, 2023
  • 0 Comments

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் சமீப வாரங்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நோய் பரவல் இது என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். அசாதாரணமான பருவமழை கொசுக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்புவது எளிதாக்கியுள்ளது.ஆனால் அதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளால் முடியாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைவலி, குமட்டல், மூட்டு மற்றும் தசை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலானது […]

ஆசியா

பொருளாதார சிக்கல் : வெளிநாடுகளில் யாசகம் கேக்கும் பாகிஸ்தானியர்கள்!

  • September 28, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட யாசகர்களில் 90 சதவீதமானோர்  பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தி டான் செய்தி நிறுவனம் தகவல்  வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஏராளமான யாசகர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாக வெளிநாட்டு பாகிஸ்தானியர்களுக்கான செனட் நிலைக்குழு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் சுல்பிகர் ஹைதர், செனட் குழுவில் திறன்மிக்க மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பான விவாதத்தின் போது இந்த தகவலை முன்வைத்துள்ளார். சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குச் செல்ல பல […]

உலகம்

உஸ்பெகிஸ்தான் தலைநகர் விமான நிலையம் அருகே பாரிய வெடிப்பு சம்பவம்

  • September 28, 2023
  • 0 Comments

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்துக்கு அருகில் நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 16 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் குறைந்தது 160 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் குறைந்தது 24 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். குறித்த விமான நிலையத்துக்கு அருகே உள்ள சுங்க சுரங்கத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுபற்றி […]

இலங்கை

தெஹிவளையில் ஐஸ் உடன் ஒருவர் கைது

  • September 28, 2023
  • 0 Comments

ஒரு கிலோவும் 10 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (28) தெஹிவளை, பன்னலோக மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும் 150,000 ரூபா ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை […]

பொழுதுபோக்கு

சிம்புவுக்கு திருமணம்…? கோலிவுட்டில் பரபரக்கும் புதிய தகவல்

  • September 28, 2023
  • 0 Comments

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சிம்பு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். ஒருவழியாக எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. எனவே தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் தடுமாறுவாரோ என ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அரசியல் களத்தையும், டைம் லூப் […]

ஐரோப்பா

ஸ்வீடனில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் : மூவர் பலி!

  • September 28, 2023
  • 0 Comments

ஸ்வீடனில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். கிரிமினல் கும்பல்களின் பகைமை உணர்வு காரணமாக ஏற்பட்ட வன்முறைகளில் குறித்த உயிரிழப்புகள் பதிவாகியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை பிற்பகுதியில், ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதியில் 18 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஸ்வீடிஷ் தலைநகருக்கு தெற்கே ஜோர்ட்ப்ரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்துள்ளார். அதேபோல் இன்றைய தினம் (28.09)   ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே உள்ள உப்சாலாவில் […]

இலங்கை

ஜசீரா ஏர்வேஸ் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு

  • September 28, 2023
  • 0 Comments

ஜசீரா ஏர்வேஸ் (Jazeera Airways) கொழும்பில் தமது விமான சேவையை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது. புதிய ஏர்வேஸ் கொழும்பிற்கு தினசரி விமானங்களை இயக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஜசீரா ஏர்வேஸ் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாகும். இது 2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் கொழும்புக்கு புறப்பட்டது. அதிக தேவை காரணமாக, ஜசீரா ஏர்வேஸ் மீண்டும் தங்கள் தினசரி சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் விசா கட்டணங்கள் – வெளியான முழு விபரம்

  • September 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு அக்டோபர் 4 முதல் அமலுக்கு வரும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு வெளியே இருந்து […]

இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • September 28, 2023
  • 0 Comments

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக பணிப்புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்  45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த […]

error: Content is protected !!