வாழ்வியல்

சுயிங்கம் மெல்பவரா நீங்கள்? உங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 30, 2023
  • 0 Comments

வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதற்காக சுயிங்கம் மெல்லும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். சிலர் சுயிங்கம் சுவைப்பது பசியை கட்டுப்படுத்தும் என்று கருதுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உதவும் என்பது சிலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் உடல் எடை இழப்புக்கு சுயிங்கம் உதவாது. அதே வேளையில் உட்கொள்ளும் கலோரி அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவி செய்யும். சுயிங்கம் மெல்லுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம்! கலோரிகள் எரிக்கப்படும்: சுயிங்கம் மெல்லும் போது வாய் அடிக்கடி நகரும். அப்படி வாய் அசைபோடும்போது […]

இந்தியா

மணிப்பூரில் தொடரும் பதற்ற நிலை!

  • July 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் சுயவிபரங்களை சேகரிக்கும் பணிகளை அந்த மாநில விரைவுப்படுத்தியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இதுவரையில் 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அத்துடன் பல பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மணிப்பூரில் […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய வகை வைரஸ்

  • July 30, 2023
  • 0 Comments

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுளளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் 113 தனிப்பட்ட மாற்றங்களைக் கொண்ட புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜதார்த்தாவில் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய, அந்த நோயாளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்த போது அந்த வைரஸ் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுமார் 37 வகை மாறுதல்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Android கையடக்க தொலைபேசிகளுக்கு அறிமுகமான ChatGPT

  • July 30, 2023
  • 0 Comments

OpenAI நிறுவனம் ChatGPT-3.5 வெர்ஷனை, Android பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். இனி இதனால் கையடக்க தொலைபேசி மற்றும் டேப்லெட்டுகளில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதன் தற்போதைய சிறப்பு என்னவென்றால், இதுவரை ChatGPT-ஐ பிரவுசரில் மட்டுமே பயன்படுத்தும்படியாக இருந்து வந்த நிலையில், தற்போது Android பயனர்களும் செயலி வடிவில் அதைப் பயன்படுத்தும் வகையில் OpenAI வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – வெளியேற்றப்பட்ட 2 பயணிகள்

  • July 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பிரிஸ்பேனைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 42 வயது நபர் ஒருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் விமானத்தில் சிகரெட் புகைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த 03 பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என […]

அறிந்திருக்க வேண்டியவை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • July 30, 2023
  • 0 Comments

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூளை செயல்பாட்டில் பாதிப்பு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று நீண்டகால மூளை செயல்பாடு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காலப்போக்கில் அவர்களின் மூளை செயல் திறன் எவ்வாறு மாறியது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொரோனா நோய்த் […]

ஐரோப்பா

உக்ரைன் போரால் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை – ஏவுகணைகளை தயாரிக்கும் ஆஸ்திரேலியா

  • July 30, 2023
  • 0 Comments

உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஆஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது. இருநாடுகளின் வெளிவிவகார பாதுகாப்பு அமைச்சர்கள் மத்;தியில் பிரிஸ்பேர்னில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கையில் அவுஸ்திரேலியா கைச்சாத்திடும். இந்த உடன்படிக்கை மூலம் ஆயுதஉற்பத்தியில் ஒரு முக்கிய நாடு இடத்திற்கு அவுஸ்திரேலியா தன்னை உயர்த்திக்கொள்ளும். மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்திகளை ஆஸ்திரேலியானவினால் அதிகரிக்க முடியும். […]

ஆசியா

சிங்கப்பூரில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார்

  • July 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் 200 க்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 12 மற்றும் கடந்த திங்கட்கிழமைக்கு இடையில், குற்றப் புலனாய்வுத் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர். வணிக வளாகங்கள், மசாஜ் நிறுவனங்கள், அழகு நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழப்பு

  • July 30, 2023
  • 0 Comments

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைத்தியர்கள் பரிசோதித்ததில் குறித்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்திருந்த நிலையில் மீளவும் யாழ்ப்பாணம் செல்லவிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், இந்தியா வந்த ஆண் ஒருவரும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். குடிவரவு சோதனையின் பின்னர் சுங்கப் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி- தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  • July 30, 2023
  • 0 Comments

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன. இந்தநிலையில் உரப்பற்றாக்குறை நிவர்த்திக்கப்படாவிட்டால் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!