நடிகர் ராகவா லாரன்சுக்கு பெரிய மனசு
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/1677761834822-1296x700.jpeg)
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.12 ம் வகுப்பு படித்து விட்டு அடுத்து என்ன படிக்கலாம்
எங்கு படிக்கலாம் என ஆலோசனை இல்லாமல் தவித்தது கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனை வழங்க பட்டு ஏழை எளிய தாய் தந்தையை இழந்த மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவி தொகை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு சமூக சேவகரும் திரைப்பட நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் வழியில் மன்றத்தின் காப்பாளரும் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் ஆலோசனையின் பெயரில் பெற்றோரை இழந்து வாடும் மேற்படிப்பு படிக்க விருப்பம் இருந்தும்,
பணவசதி இல்லாத தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு முழு கட்டனுமும் ஏழை எளிய 200 மாணவ மாணவியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.10000 க்கான காசோலையை சமூக சேவகரும்
STAR 1 GROUPS நிறுவனரும் செய்தியாளர் ECR மு.சுதாகர் மற்றும் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்றத்தின் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் STAR 1 GROUPS இயக்குனர் செய்தியாளர் கா.விஜய் ஆகியோர் வழங்கினர்.
குறிப்பாக தாய் தந்தையை இழந்த பல்வேறு மாணவர்களுக்கு கல்வி முழு செலவையும் ஏற்று மாணவர்களை படிக்க வைக்கின்றனர்.
கல்வி உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை மன்றத்தினருக்கும் STAR 1 GROUPS நிறுவனத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.