பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த பிரான்ஸ்

பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத சதித்திட்டத்திற்காக ஜாஹிர் மஹ்மூத் என்ற நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, 2020 ஆம் ஆண்டு சார்லி ஹெப்டோ அலுவலகங்களுக்கு வெளியே இரண்டு பேரை கத்தியால் குத்தியதாக பாகிஸ்தானியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரான்சுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த சிறைத்தண்டனை முடிந்த பிறகு அவர் மீண்டும் பிரான்சுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும்.
(Visited 1 times, 1 visits today)