Site icon Tamil News

இலங்கையில் பணத்திற்காக விற்கப்படும் பெண்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகல, ஹண்டபாங்கொட பிரதேசத்தில் பாழடைந்த குகை பாணி வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த இங்கிரிய பொலிஸார், அதன் முகாமையாளராக பணிபுரிந்து மஹனவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவரை கைது செய்தனர்.

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தேரர் அங்கியை கைவிட்ட நபரே விபச்சாரி வீட்டின் அனைத்து விவகாரங்களையும் நடத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மற்ற இருவரில் ஒருவர் கணவரை பிரிந்து பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும் தெரியவந்துள்ளது.

3,000 ரூபாவுக்கு சேவை வழங்குவதன் அடிப்படையில் இந்தப் பெண் இங்கு பணிபுரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மூன்றாவதாக கைதுசெய்யப்பட்டவர் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத இளைஞரொருவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version