ட்ரம்பின் 48 மணிநேர கெடு – புதிய உச்சம் தொட்ட எண்ணெய் விலை!
ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஒரு தீர்மானத்திற்கு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 48 மணிநேர கெடு விதித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதாவது ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், செவ்வாய்க்கிழமைக்குள் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டு வீசப்படும் என்று புதிய இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது.
இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 109.80 டொலராகவும், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் 112.40 டொலராகவும் உயர்ந்தது.
ஆசியப் பங்குச் சந்தைகள் கலவையான எதிர்வினைகளைக் காட்டின; ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா ஆகியவை ஆதாயங்களைக் கண்டன, அதே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவை சந்தித்துள்ளன.
இதேவேளை ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான், கேலி செய்யும் மீம்கள் மூலம் பதிலளித்ததுடன், ஒரு மூத்த இராணுவ அதிகாரி இந்த இறுதி எச்சரிக்கையை “கையாள்வதற்கு இயலாதது” என்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





