உலகம்

தென்கொரியாவில் களமிறங்கும் ட்ரம்ப் – வடகொரியாவின் செயலால் பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட முக்கியமான உலகத் தலைவர்கள் அடுத்த வாரம் தென்கொரியாவில் ஒன்றுகூடவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடைபெறுகின்றது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய சில முக்கிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டை முன்னிட்டு தென்கொரியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது.

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என்று தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தென்கொரியாவில் வைத்து சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேரடி சந்திப்பில் ஈடுபடவுள்ளமையும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியுடனான நேரடி சந்திப்பை ட்ரம்ப் இரத்து செய்துள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றமை முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்