மீண்டும் வருகிறார் தொடை அழகி ரம்பா!
தொடை அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரம்பா, Rambha சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்துக்கு வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ரம்பாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் ‘அழகிய லைலா…’ பாடலில் ரம்பாவின் உடை பறக்கும் ஆட்டம் பலரின் மனங்களில் இன்னும் குடிகொண்டுள்ளது.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரம்பாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.
ரம்பா, 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரம்பா, தற்போது கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சுமார் 16 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா, அவ்வப்போது சின்னத்திரையில் மட்டும் தலைகாட்டி வந்தார். தற்போது விரைவில் வெள்ளித்திரைக்கும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து ‘ஸ்லிம்’ ஆகியுள்ளார். புதிய கதைகள் கேட்டு வரும் ரம்பா ஓரிரு கதைகளை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான ‘பெண் சிங்கம்’ படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார்.
இதன்மூலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவுள்ளார் 49 வயதாகும் ரம்பா.





