செய்தி

“பொன்னியின் செல்வன் 2” படத்திற்கு வந்த சோதனை! என்ன நடந்தது தெரியுமா?

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கல்கி, தென்னகத்தை ஆண்ட சோழ மன்னனான ‘அருண்மொழி வர்மன்’ பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் ‘பொன்னியின் செல்வன்’.

இதனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக காத்தியும், நடித்திருந்தனர்.

மேலும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரபு, விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கி, நேர்த்தியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களையும் இயக்கி இருந்தார் இயக்குனர் மணிரத்னம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சுமார் 300 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் பாகத்தின் வசூலை நெருங்க முடியாத நிலையில், தற்போது வெளியான ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.

அதன்படி, இன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பின்னரே ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் ஒரே மாதத்தில் ஓடிடி க்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 28 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி