விளையாட்டு

பாகிஸ்தானுக்கு ICC இறுதி எச்சரிக்கை விடுப்பு!

  • February 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு , சர்வதேச கிரிக்கெட் சபை ICC மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது. இதற்கு ICC கடும் எதிர்ப்பை வெளியிட்டது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. எனினும், […]

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC எச்சரிக்கை!

  • February 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை ICC எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. ICC கருதுகின்றது. மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற […]

இலங்கை செய்தி

8 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

  • January 31, 2026
  • 0 Comments

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுக்கு, பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். எனவே, அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய […]

உலகம் ஐரோப்பா

வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு: அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கையா?

  • January 29, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி Xi Jinping மற்றும் பிரிட்டன் பிரதமர் Keir Starmer ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை திரும்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால், நட்பு நாடுகள்கூட கடும் தாக்கத்தை எதிர்கொண்டுவருகின்றன. ஏற்றுமதி பொருளாதாரதில் அமெரிக்காவை மற்றும் சார்ந்திருக்காது, ஏனைய பலம் பொருந்திய நாடுகளில் தமக்குரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதாரம்மீது தமது பார்வையை செலுத்திய நிலையில், […]

அரசியல் இலங்கை செய்தி

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் செயல்படாதீர்: NPP அரசுக்கு எச்சரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் செயல்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது இந்நாட்டின் உரிமையாளர் அல்லர். இந்நாட்டை நிர்வாகிப்பதற்குரிய பொறுப்பு மாத்திரமே அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டுக்குரிய அடையாளம் […]

உலகம்

மத்திய கிழக்கை சூழ்கிறது போர் மேகம்: வான்வெளியை மூடியது ஈரான்!

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்குக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமான் நாட்டுக்குரிய பயண எச்சரிக்கையின் ‘அபாய’ நிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஈரானில் மோதல்நிலை உக்கிரமடையும் என்பதாலேயே வான்வெளி மூடப்பட்டுள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கிலுள்ள தமது படைகளை அமெரிக்கா வெளியேற்றி வருகின்றது. இராணுவ நடவடிக்கைக்குரிய தந்திரோபாய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஈரானுக்கு ஆஸ்திரேலியா பயணத் தடை […]

இந்தியா

தொடர்கிறது “ஆபரேஷன் சிந்தூர்”: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!

  • January 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.எனவே, பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” இவ்வாறு இந்திய இ ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 15 ஆம் திகதி இராணுவ தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் டெல்லியில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதன்போதே இந்திய இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, […]

ஆஸ்திரேலியா

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு!

  • January 14, 2026
  • 0 Comments

ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Benny Wong அறிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் அதன் சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராட்டக்காரர்;கள் கொலை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் […]

உலகம்

ஈரானில் உக்கிரமடையும் போராட்டம்: கூட்டு தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல், அமெரிக்கா?

  • January 14, 2026
  • 0 Comments

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் திகதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. “ஜென் இசட்” இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, ஜனாதிபதி மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர். இதனையடுத்து கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர்மீது விமல் விமர்சனக் கணை தொடுப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச சூளுரைத்துள்ளார். கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்ச இன்று சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றுவரும் இப்போராட்டத்தின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர் போல செயல்படுவதாகவும், கல்வி […]

error: Content is protected !!