இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது. தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன. சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று […]

உலகம் செய்தி

ஈரானை இயக்கும் புடின்: பிரித்தானியா எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே ஆபத்தான ராணுவ உறவு குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் John Healey எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ரஷ்யா தனது புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஈரானுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு “ஆக்கிரமிப்பு அச்சாக” உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்பாடுகளுக்குப் பின்னால் விளாடிமிர் புடினின் மறைமுகக் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!

  • March 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது […]

உலகம் செய்தி

துருக்கியால் இயக்கப்படும் எரிபொருள் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல்!

  • March 26, 2026
  • 0 Comments

கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த துருக்கியால் இயக்கப்படும் கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Sierra Leonne நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 27 துருக்கி மாலுமிகள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்திலிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயுடன் புறப்பட்ட இந்த கப்பல் Turkish firm Besiktas நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய நிலையில், […]

அரசியல் இலங்கை செய்தி

“சுரேஷ் சாலே வைத்தியசாலையில்”-புலி புராணம் பாடுகிறது மஹிந்த அணி!

  • March 26, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]

பொழுதுபோக்கு

கார் விபத்தில் நடிகை பலி!

  • March 26, 2026
  • 0 Comments

நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா Harshil Kalia (வயது – 30) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ளார். அத்துடன், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார். சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது கார் தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது. இதில் ஹர்ஷில் காலியா, […]

இந்தியா செய்தி

மாயாஜால தேன் எனக்கூறி லட்சங்களை சுருட்டிய ஆசாமி கைது!

  • March 26, 2026
  • 0 Comments

துருக்கியில் உள்ள குகையில் இருந்து பெறப்பட்ட அரிய வகை தேன் எனக் கூறி 15 லட்சம் ரூபா (இந்திய நாணய மதிப்பு) விற்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த அசோக் காரத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அசோக், தன்னை சாமியார் என்றும் ஜோதிடர் என்றும் கூறிக் கொண்டு மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணொருவர் கடந்த வாரம் நாசிக் காவல்துறையில் அசோக் மீது பாலியல் வன்கொடுமை […]

உலகம் செய்தி

ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயம்!

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதியை Xi Jinping சந்தித்து பேச்சு நடத்துவதற்காக அந்நாட்டுக்கு செல்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். எனினும், ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயமானது இரு […]

இலங்கை செய்தி

கொழும்பு வரும் ரஷ்ய தூதுக்குழு ஜனாதிபதியுடன் இன்று பேச்சு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இன்று (26) பயணம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய தூதுக்குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் அனடோலியேவிச் மார்ஷவின் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவே கொழும்பு வருகின்றது. நீண்டகால ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம், பெட்ரோலிய விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட, இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையேயான உடன்பாடு செய்து கொள்வது குறித்து இக்குழு ஆராயவுள்ளது. 1974-ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கையுடன் ஒரு முறையான எரிசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மூத்த […]

error: Content is protected !!