விளையாட்டு

IPL கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!

  • March 28, 2026
  • 0 Comments

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL T-20 கிரிக்கெட் தொடர் இன்று (28) ஆரம்பமாகின்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) , சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகியன மோதுகின்றன. இம்முறை தொடரில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இதுவரை பட்டம் வெல்லாத டெல்லி […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு!

  • March 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக டொனால்ட் ட்ரம்புக்கு donald trump அமெரிக்காவில் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. “நோ கிங்ஸ்” (No Kings) என்ற மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பாரிய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் நடைபெறவுள்ள இப்போராட்டங்களில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் […]

இலங்கை உலகம் செய்தி

சவூதி விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

  • March 28, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் Prince ⁠Sultan விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன கூட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்நிலையிலேயே சவூதியில் மேற்படி தளம் தாக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த நான்கு வாரங்களாக […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: பலியானோர் எண்ணிக்கை வெளியீடு!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் இன்று 28 ஆவது நாளாக தொடர்ந்தது. உயிரிழப்புகள், உடமை இழப்புகள், கட்டிடங்கள் சேதம் என பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் ஈரானில் 1,937 பேர் பலியாகியுள்ளனர். 24,800 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 5,492 பேர் காயமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள தென்னை முக்கோண வலயம் தொடர்பில் ஆராய்வு!

  • March 27, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்தார். 16,000 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்குத் தேவையான தென்னம்பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன […]

உலகம் செய்தி

உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை திசை திருப்ப மத்திய கிழக்கு போரை பயன்படுத்தும் ரஷ்யா

  • March 27, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப ரஷ்யா முயல்வதாகக் ஜேர்மன் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் G7 மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், ஈரானின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தேவையான இலக்குகளை அடையாளம் காண புடின் உதவி செய்துவருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜேர்மன் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் மேலும் உக்கிரமடையும்: போலந்து பிரதமர் எச்சரிக்கை!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் போர்ச்சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் Donald Tusk எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது நட்பு நாடுகளிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இப்பகுதியில் வரும் நாட்களில் அமைதி திரும்புவது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைப் போக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரப்போகும் மாற்றங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். எனினும், இந்தச் சாத்தியமான மோதல்கள் குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இலங்கை செய்தி

‘கொலையாளிக்கு துணைபோகாதீர்’ – மட்டக்களப்பில் போராட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (27) பாரிய கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது. இதன்போது, போராட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பொலிஸாரால் பஸ்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, பிரதான வாயில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. […]

உலகம் செய்தி

பாடசாலைமீதான தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நாவின் ஈரான் சுட்டிக்காட்டு!

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்கள் நாடுமீது சட்டவிரோதப் போரைத் திணித்துள்ளன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலானது போர்க்குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா துல்லியமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதால் இதனை தற்செயலான தாக்குதலாகக் கருதமுடியாது. எனவே, சர்வதேச சமூகம் இதற்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்த வேண்டும் எனவும் Abbas […]

உலகம் செய்தி

“மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் தங்கும் விடுதிகள் இலக்கு வைப்பு”!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விடுதிகள் ஈரானின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள பொதுமக்களையும் கட்டிடங்களையும் அமெரிக்க படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கப் படைகளுக்குத் தங்குமிடம் வழங்கும் விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்காப்பு நடவடிக்கையாக அமெரிக்கப் படைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்கப் போவதாக ஈரான் ராணுவம் வெளிப்படையாக […]

error: Content is protected !!