உலகம் செய்தி

போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மிக விரைவில் போர் முடிவுக்கு வரும் என நினைக்கிறேன், அவர்களது தலைமை உட்பட அவர்களிடம் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். ஹார்முஸ் நீரினை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, “ ஈரான் Iran அதுபோன்ற செயல்களில் […]

ஆஸ்திரேலியா உலகம்

ஈரான் வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 10, 2026
  • 0 Comments

ஈரானின் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு ஆஸ்திரேலியா Australia புகலிடம் வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சரை, வீராங்கணைகள் நேற்றிரவு சந்தித்துள்ளனர். இதன்போது உரிய ஆவணங்களில் ஆவணங்களிடம் கைச்சாத்திடப்பட்டு, மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கணைகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அடைக்காலம் வழங்காதபட்சத்தில் தமது நாடு அவர்களை பொறுப்பேற்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை செய்தி

மே தினக் கூட்டத்தை கைவிடுகிறது மொட்டு கட்சி!

  • March 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி இம்முறை மே முதலாம் திகதி மேதினக் கூட்டம், பேரணியை என்பவற்றை நடத்தாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “மே முதலாம் திகதி இம்முறை பூரணை தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் கட்சியால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது. எனினும்,மக்கள் கூட்டம் மற்றும் பேரணி பிரிதொரு நாளில் நிச்சயம் நடத்தப்படும். மக்கள் ஆதரவு இல்லை […]

உலகம் செய்தி

11 ஆவது நாளாக தொடரும் போர்: வளைகுடா நாடுகளுக்கு ஆஸ்திரேலியா இராணுவ உதவி!

  • March 10, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் 11 ஆவது நாடாக நீடிக்கும் நிலையில், அப்போர் உலகளவிலும் தாக்கங்களை ஏற்படுத்திவருகின்றது. ஈரானின் புதிய உச்ச தலைவரையும் கொல்வதற்கு இஸ்ரேல், அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், மறுபுறத்தில் ஈரானும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. இந்நிலையில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் Drone தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலியா Australia இராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதற்கமைய பிரதமர் Anthony Albanese, வான்வெளி கண்காணிப்புப் பணிகளுக்காக E-7A வெட்ஜெடைல் விமானத்தையும் 85 இராணுவ […]

செய்தி

பூசகர் வெட்டிக் கொலை: நயினாதீவில் பயங்கரம்!

  • March 9, 2026
  • 0 Comments

யாழ்.நயினாதீவல் Nainatheevu பூசகர் ஒருவர் வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பயங்கரச் சம்பவம் இன்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. தொழில் தொடர்பில் இரு பூசகர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு வாள் வெட்டுவரை சென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயேமற்றைய பூசாரி பலியானார் எனக் கூறப்படுகின்றது. இக்கொலைச் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஆஸ்திரேலியா உலகம்

ஈரானிய கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்!

  • March 9, 2026
  • 0 Comments

ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் Australia. தஞ்சம் asylum கோரியுள்ளனர் என தெரியவருகின்றது. 2026 மகளிர்  ஆசியக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டில் Gold Coast பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குழு ஆட்டத்தில் ஈரான் அணி தோல்வி அடைந்தது. இதனால் உலகக்கிண்ண தொடரில் இருந்து அவ்வணி வெளியேறியது. ஐந்து வீராங்கணைகள் போட்டியில் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால், அவர்கள் தாயகத்தில் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள […]

இலங்கை செய்தி

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கிய தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இன்று (09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான Venerable Battaramulla Seelarathana Thero சிறு குழுவொன்றே இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி, போரில் மேற்படி நாடுகளுக்குரிய ஆதரவை வெளிப்படுத்தினர். இலங்கையில் நடந்தபோரின்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வழங்கி ஆதரவை தாங்கள் மறக்கவில்லை என்றபோதிலும், இந்த போரில் இஸ்ரேல் […]

அரசியல் இலங்கை செய்தி

மின்சார சபையின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்: அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!

  • March 9, 2026
  • 0 Comments

“தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டியுள்ளார். “ இலங்கையின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பியின் JVP நிலைப்பாடாக அமைந்திருந்தது. ஆனால் இன்று அதற்கு மாறான செயல்பாடே இடம்பெறுகின்றது.” எனவும் அவர் கூறினார். “மின்சார சபை ஊழியர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட […]

இலங்கை செய்தி

பெருந்தோட்ட அமைச்சுக்கு புதிய செயலர் நியமனம்!

  • March 9, 2026
  • 0 Comments

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். குறித்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

இலங்கை செய்தி

ஜனாதிபதியை சந்தித்தார் தம்மாலங்கார தேரர்!

  • March 9, 2026
  • 0 Comments

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி, தேரருடன் சிறு உரையாடலை மேற்கொண்டதுடன், அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஜனாதிபதிக்கு தேரர் தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்தார். கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா […]

error: Content is protected !!