இலங்கை செய்தி

வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையினருக்கு அழைப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

  “வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை மேம்படுத்துவதற்குத் தனியார் துறையினருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களுடன் இன்று புதன்கிழமை (11) காலை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடாக எமக்குத் தற்போது ஒரு சாதகமான […]

உலகம்

‘ஆப்பரேஷன் சிந்தூர்’ – சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படத்தளம் இடிப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளமொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை கடந்த வருடம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய முரித் விமானப்படைத் தளம் பலத்த சேதமடைந்தது. ஆதனை மறுசீரமைக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையிலேயே முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2025, மே 10-ல் அதிகாலை 2 மணி முதல் 5 […]

ஆஸ்திரேலியா உலகம்

முடிவை மாற்றினார் தஞ்சம் கோரிய வீராங்கனை: ஈரான் திரும்ப திட்டம்!

  • March 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் கால்பந்தாட்ட அணி வீராங்களைகளில் ஒருவர் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். அவரது தனது தாய் நாட்டுக்கு திரும்பும் முடிவை எடுத்துள்ளார். மேற்படி தகவலை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் உறுதப்படுத்தியுள்ளார். குறித்த பெண் ஈரானிய தூதரக அதிகாரிகளுடன் வெளியேறியதால் மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்த முடிவுகள் யாவும் எவ்வித அழுத்தமுமின்றி சுயவிருப்பத்தின் பெயரிலேயே எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். எனினும், ஆஸ்திரேலிய அரசு தமது வீராங்கனைகளை பயமுறுத்தி […]

பொழுதுபோக்கு

‘துரந்தர்-2’ டிரெய்லர் சாதனை!

  • March 11, 2026
  • 0 Comments

‘துரந்தர்’ படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான முன்னோட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெற்றிநடை போட்டுவருகின்றது. ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்து வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம் ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம் மார்ச் 19 ஆம்; திகதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மேற்படி படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. வெளியான வெறும் 48 மணி நேரத்துக்குள் […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடி ஆராய்வு!

  • March 11, 2026
  • 0 Comments

பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு அமைய மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயலாளராகவும் அழைப்பாளராகவும் […]

உலகம் செய்தி

மேலும் இரு ஈரானியர்களுக்கு தஞ்சம் வழங்கியது ஆஸ்திரேலியா!

  • March 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரானிய பெண் வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்கள் உட்பட எழுவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு தேசிய கீதத்தைப் பாட மறுத்ததால் ஈரானில் இவர்களுக்கு உயிர்பயம் மற்றும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அரசு மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியைச் செய்துள்ளது. சிட்னி விமான நிலையத்தில் வைத்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசப்பட்டு, எவ்வித அழுத்தமுமின்றி அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் தங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் […]

உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈரானை கண்டித்து தீர்மானம்: மாற்று வழியை கையாளும் ரஷ்யா!

  • March 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (11) முக்கிய இரு தீர்மானங்கள் தொடர்பில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளன. ஈரானின் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் வழித்தடங்களுக்கான அச்சுறுத்தல் என்பவற்றைக் கண்டித்து முதலாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள், பிரிட்டன் உட்பட மேலும் சில நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தை முன்வைத்துள்ளன. மறுபுறத்தில் ஈரானின் நட்பு நாடான ரஷ்யாவும் தீர்மானமொன்றை முன்வைக்கவுள்ளது. எந்தவொரு நாட்டையும் பெயரிடாமல் பொதுவான அமைதி மற்றும் பேச்சுக்கான […]

உலகம் செய்தி

12 ஆவது நாளாக தொடரும் போர்: 43 ஆயிரம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்!

  • March 11, 2026
  • 0 Comments

ஈரான்மீதான இஸ்ரேல், அமெரிக்க கூட்டு தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை மத்திய கிழக்கில் இருந்து 43 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர் என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை சிறப்புப் பணிக்குழுவைவொன்றை அமைத்திருந்தது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு நேரடியாக இதன்மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் பல தனிவிமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பயணிகள் வணிகரீதியான விமானங்களையே பயன்படுத்தியதால் அவை குறைந்த அளவிலான பயணிகளுடனேயே […]

உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் இராணுவம்: புதிய திட்டம் வகுப்பு!

  • March 11, 2026
  • 0 Comments

உக்ரைன் ஜனரிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி Ukrainian President Volodymyr Zelensky தமது நாட்டின் இராணுவ வல்லுநர்களை வளைகுடா நாடுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். ஆளில்லா விமானங்களைச் Drones சுட்டு வீழ்த்துவதில் தங்களுக்குள்ள தனித்துவமான அனுபவத்தைப் பகிரும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ரஷ்யாவுடனான நீண்டகாலப் போரின் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பத் திறன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார். ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பிறகு, இத்தகைய தற்காப்பு […]

இலங்கை செய்தி

“தேசியப் பொருளாதாரத்துக்கு வடக்கில் இருந்து 10 சதவீத பங்களிப்பு”

  • March 11, 2026
  • 0 Comments

“இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் N. Vedhanayakan. தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் […]

error: Content is protected !!