இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இலங்கை, ஜப்பான் இணக்கம்!

  • March 21, 2026
  • 0 Comments

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara , அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் Shinjirō Koizumi பேச்சு நடத்தியுள்ளார். டோக்கியோவிலுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது. இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free […]

இலங்கை செய்தி

யாழில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது SJP!

  • March 21, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் SJP யாழ்ப்பாணம் -கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும், ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்

இலங்கை செய்தி

வலி. வடக்கில் ஏப்ரலில் காணி விடுவிப்பு?

  • March 21, 2026
  • 0 Comments

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரலில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார். யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (20) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தையிட்டி பகுதியில் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை செய்தி

‘மத்திய கிழக்கு போர்ச்சூழல்’ – அவசர கட்சி தலைவர்கள் கூட்டம்!

  • March 21, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) முற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அது இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குரித்து கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் […]

இலங்கை செய்தி

விபத்தில் தாயும், மகளும் பலி: யாழில் சோகம்!

  • March 21, 2026
  • 0 Comments

யாழ். சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகளும் பலியாகியுள்ளனர். இப்பெருந்துயர் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். […]

ஆஸ்திரேலியா விளையாட்டு

ஆஸ்திரேலிய பொலிஸார் அழுத்தம்: ஈரான் வீராங்கனை குற்றச்சாட்டு!

  • March 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய காவல்துறை தங்களை அந்நாட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினர் என்று ஈரானின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனை குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு காரணங்களைக் கூறி தங்களைத் தடுக்க முயன்றதாகவும் Fatemah Shaban சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் மகளிர் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனைகள் எழுவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஐவர் ஈரான் திரும்ப முடிவெடுத்தனர் எனவும், இருவர் மட்டுமே தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையிலேயே தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளில் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டை […]

உலகம் செய்தி

‘very late’- பிரிட்டனின் முடிவு குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கிய போதிலும், அதனை ட்ரம்ப் வெளிப்படையாக வரவேற்கவில்லை. மாறாக இது தாமதித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என அவர் விமர்சித்துள்ளார். இது விடயத்தில் பிரிட்டனின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதாக டிரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே மிகச்சிறந்த உறவு இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் பிரிட்டன் இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் கருத்தாக உள்ளது. ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்த அனுமதி!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பிரிட்டன் விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரிட்டன் தற்போது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஆதரவு அளித்துவந்த பிரிட்டன், தற்போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்கும் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பிரிட்டன் ஆரம்பத்தில் அனுமதி வழங்காதது தொடர்பில் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். எனினும், பிராந்தியப் பாதுகாப்பையும் நட்பு நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை செய்தி

கோட்டாபய தப்பியோட எவ்வளவு செலவானது? தகவல்களை வெளியிட உத்தரவு!

  • March 21, 2026
  • 0 Comments

மக்கள் புரட்சியின்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச 2022 ஆம் ஆண்டு ஜூலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்றது தொடர்பான செலவீனங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி, கடற்படை தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தத் தகவலை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று […]

செய்தி

இந்திய தூதுவருக்கு சீன மொழியில் புதிய பெயர்!

  • March 20, 2026
  • 0 Comments

இந்திய – சீன உறவு ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதாவது 2026 ஆம் ஆண்டு ஆரம்பித்திலேயே நெருங்க ஆரம்பித்துள்ளது. குஜராத் மாநிலத்தை மையமாகக் கொண்ட மணிகொன்றோல் (moneycontrol) என்ற ஆங்கில செய்தித் தளம், இந்திய – சீன உறவின் நெருக்கம் குறித்து சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளது. இரு பெரிய எண்ணெய் கொள்வனவு நாடுகளான இந்தியாவும் சீனாவும், ஈரான் போரில் அமைதியை உருவாக்க சிறந்த தளம் என்று இச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. எண்ணெய் வயல்களை ட்ரோன்கள் […]

error: Content is protected !!