இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் தொட்டது எரிபொருள் விலை!

  • March 21, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றறொன்றின் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு […]

உலகம் செய்தி

ஈரானின் 8,000 இலக்குகள்மீது தாக்குதல்: 130 கப்பல்கள் அழிப்பு!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரானின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு மையங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அந்நாட்டின் போர் ஆற்றல் குறைந்துவருகின்றது என அமெரிக்கா கருதுகின்றது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் விடுத்து வந்த அச்சுறுத்தல்கள் குறைந்துள்ளது என அமெரிக்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஏவுகணை ரேடார் நிலையங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவு தளங்களை அழித்ததன் மூலம் ஈரானின் கடற்படை கண்காணிப்புத் திறன் பலவீனமடைந்துள்ளது. இதுவரை சுமார் 8 ஆயிரம் இலக்குகள் மற்றும் 130 ஈரானியக் கப்பல்கள் […]

உலகம் செய்தி

அடுத்து வரும் நாட்களில் உக்கிர தாக்குதல்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதல் அடுத்துவரும் நாட்களில் உக்கிரமடையும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். மத்திய கிழக்கு போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே இஸ்ரேல் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் – அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஈரான் […]

இந்தியா செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன், பிரதமர் மோடி அவசர பேச்சு!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கிடையில் தொலைபேசிமூலம் இன்று (21) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஹார்முஸ் நீரிணை சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். ‘‘ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியானுடன் தொலைபேசியில் பேசி, ரமலான் மற்றும் நவ்ரூஸ் (புத்தாண்டு) வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பைக் கொண்டு வரும் என்று நம்பிக்கையை தெரிவித்தேன்.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பிராந்திய ஸ்திரதன்மைக்கு […]

விளையாட்டு

தொடரை வெல்லுமா நியூசிலாந்து? நாளை பலப்பரீட்சை!

  • March 21, 2026
  • 0 Comments

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 4ஆவது T20 போட்டி நாளை (21) நடைபெறுகின்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றும். எனவே, அவ்வணி முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. மறுபுறத்தில் இப்போட்டியில் வென்று தொடரில் தமக்கான வெற்றிவாய்ப்பையும் தக்கவைப்பதற்கு தென்னாபிரிக்கா அணி போராடும். எனவே, போட்டியில் கடைசிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நேற்று நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகொலை: மகள், காதலன் கைது! நடந்தது என்ன?

  • March 21, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழகச் சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன், தனது மகளின் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட விரிவுரையாளரின் சடலம் தனங்களப்பு காற்றாலைப் பகுதியில் இருந்து இன்று (21) மீட்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் அரங்கேற்றியுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விரிவுரையாளரின் 19 வயது மகளும், 21 வயது காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், பாண்டியன்தாழ்வுப் பகுதியில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிலிருந்து, அவரும் அவரது மகளும் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டனர் […]

உலகம்

ஜப்பான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி?

  • March 21, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாக ஜப்பான் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பில் ஈரான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஜப்பானுக்காக தற்போது நிலவும் போக்குவரத்துத் தடையைத் தற்காலிகமாக நீக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். நேரடிப் பேச்சுகள் பலனளிக்கும் என ஜப்பான் கருதினாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவைத் தூண்டாமல் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட அந்நாட்டு அதிகாரிகள் விரும்புகின்றனர். ஈரானின் இந்த அறிவிப்பு எரிசக்தி நெருக்கடிக்கு முழுமையான தீர்வாக அமையாது […]

உலகம் செய்தி

இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!

  • March 21, 2026
  • 0 Comments

மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க – பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles – IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ரிற் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்த இலங்கை, ஜப்பான் இணக்கம்!

  • March 21, 2026
  • 0 Comments

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் Aruna Jayasekara , அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் Shinjirō Koizumi பேச்சு நடத்தியுள்ளார். டோக்கியோவிலுள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் அமைந்தது. இதன்போது குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ திறன் மேம்பாடு மற்றும் இந்து -பசுபிக் பிராந்தியத்தின் நிலைத்தன்மை ஆகியவை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சந்திப்பின் போது, இந்து-பசுபிக் பிராந்தியத்தில் “Free […]

இலங்கை செய்தி

யாழில் புதிய அமைப்பாளரை களமிறங்கியது SJP!

  • March 21, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் SJP யாழ்ப்பாணம் -கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளராக அருந்தவநாதன் அனோஜன் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவினால் நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை கோப்பாய் தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக சதாசிவம் திலீப்குமாரும், ஒருங்கிணைப்பாளராக கமலசிங்கம் மதனகாந்தும் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமன கடிதத்தையும் சஜித் பிரேமதாசா வழங்கி வைத்தார்

error: Content is protected !!