உலகம் செய்தி

தீர்க்கமான கட்டத்தை எட்டிவிட்டது போர்: ஈரானின் ஆட்சி மாற்றத்தை வலிறுத்துகிறது இஸ்ரேல்! 

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தற்போது மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்  Israel Katz தெரிவித்தார். அத்துடன், ஈரானின் எண்ணெய் முனையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அவர் வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அதிகளவில் வைப்பதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகின்றது. எனினும், கடல் பகுதியில் வெடிபொருட்களை வைப்பதாக முன்வைக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளை ஈரான் தரப்பு க மறுத்துள்ளது. தற்போது ஈரானிய தலைநகர் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேல் […]

இலங்கை செய்தி

வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி!

  • March 14, 2026
  • 0 Comments

கம்பஹா, கட்டான – மஹா ஹூணுபிட்டிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில், வாளால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மஹா ஹூணுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது மோதலாக மாறியுள்ளது. இதன்போது சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜப்பான குழு இலங்கை வருகை!

  • March 14, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது. இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும். அதன் […]

உலகம் செய்தி

அண்டை நாடுகளை தாக்காதீர்: ஈரானிடம் ஹமாஸ் அமைப்பு கோரிக்கை!

  • March 14, 2026
  • 0 Comments

அண்டை நாடுகள்மீதான தாக்குதலை ஈரான் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் Hamas அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுவானது, ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகவே கருதப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலை ஹமாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த மோதல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. […]

உலகம் செய்தி

ஈரான் பொருளாதாரத்தின் இதயம்மீது தாக்குதல்: அரச ஊடகம் கூறுவது என்ன?

  • March 14, 2026
  • 0 Comments

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் எண்ணெய் உள்கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது. அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது எனக் கூறப்படுகின்றது. ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த மேற்படி தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை […]

இலங்கை செய்தி

“வடக்கு உற்பத்திகளை புலம்பெயர் தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு”

  • March 14, 2026
  • 0 Comments

உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய இரு […]

பொழுதுபோக்கு

‘விஜய்’ பெயரை கேட்டதுமே மின்னல் வேகத்தில் மறைந்த திரிஷா!

  • March 14, 2026
  • 0 Comments

தமிழக அரசியல் களம் மற்றும் திரையுலகில் விஜய், திரிஷா பற்றிய கதைகள் இன்னும் ஓயவில்லை. அது ஏதோவொரு வடிவில் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவியுள்ளார் நடிகை திரிஷா. தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என அவர் கோரி […]

இந்தியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு நேசக்கரம்: ஈரான் உறுதி!

  • March 14, 2026
  • 0 Comments

“நெருக்கடியான நேரத்தில் இந்தியா உதவி செய்து வருகிறது. எனவே ஈரானும் நிச்சயம் உதவி செய்யும்.” என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி Mohammad Badali தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார். “ஈரான் மற்றும் இந்தியாவுக்கிடையில் மிக நீண்ட காலமாக நட்புறவு நீடிக்கிறது. எங்களது […]

உலகம் செய்தி

எரிசக்தி கட்டமைப்பு சாம்பலாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • March 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் சாம்பலாக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையிலேயே ஈரான் இராணுவம் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கில் தனது இராணுவ பலத்தை அமெரிக்கா அதிகரித்து வருகின்றது. கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படைகளை அனுப்பி வருகின்றது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் […]

அரசியல் இலங்கை செய்தி

வடக்கில் மஹிந்த செய்ததை அநுரவால் ஏன் செய்ய முடியவில்லை?

  • March 14, 2026
  • 0 Comments

“போரை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமென்றால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் TPA, நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் Mano Ganesan கேள்வி எழுப்பினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். “மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் […]

error: Content is protected !!