மத்திய கிழக்கு போர்ச்சூழல்: பொருளாதாரக் கண்காணிப்புக் குழு கூடி ஆராய்வு!
பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு அமைய மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இக்குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயலாளராகவும் அழைப்பாளராகவும் […]













