ஈரானில் 18 வயது இளைஞனுக்கு மரண தண்டனை: மனித உரிமை அமைப்புகள் கொதிப்பு!
ஈரானில் நடந்த போராட்டத்தின்போது இராணுவத் தளத்தைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறித்த இளைஞன் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை எனவும், தவறான உள்நோக்கத்திலேயே தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மிகவும் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் நடத்தப்பட்டுள்ளது. அவருக்குச் சுதந்திரமான சட்ட உதவியும் மறுக்கப்பட்டுள்ளது. கைதாகி ஒரு மாத காலத்திற்குள்ளேயே வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பானது, மனித உரிமைகளையும் சட்ட […]












