உலகம் செய்தி

Hezbollah அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா Hezbollah அமைப்பை குறிவைத்து லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இவ்வாறு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேல், தற்போது அவ்வமைப்பின் உட்கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைத் தடுக்க லிட்டானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களைத் தகர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர […]

உலகம் செய்தி

தேசிய பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய மக்கள் அச்சம்!

  • March 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவருகின்றது. இதற்கமைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு வெளிநாட்டு இராணுவத் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் அஞ்சுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தங்களது நாடு போதியத் தயார் நிலையில் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம்: அடுத்த கட்டத்துக்கு செல்கிறது போர்!

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியத்தின் எரிசக்தி வசதிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்றும், இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் […]

இலங்கை செய்தி

எரிபொருளை பதுக்குபவர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

  • March 22, 2026
  • 0 Comments

எரிபொருளையும், மின்சாரத்தையும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அரசாங்கம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நாளை முடிவுக்கு வந்தால்கூட எரிசக்தி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால் எரிபொருள் சார்ந்த பிரச்சினை இருக்கவே செய்யும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ எரிபொருள் மற்றும் மின்சாரத்தை நாம் அனைவரும் சிக்கனமாக – […]

இலங்கை செய்தி

“வடக்கை ஆள்வோம்: முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்” – சுமந்திரன்

  • March 22, 2026
  • 0 Comments

“ஆளும் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி, JVP நாட்டை ஒருகட்சி முறைமையை நோக்கி அழைத்துச் செல்லும் அபாயம் உள்ளது.” இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் M. A. Sumanthiran தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலின்போது எமது கட்சியின் ITAK முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட நான் விரும்புகின்றேன். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைப்பதற்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி: 6 எரிபொருள் கப்பல்களின் பயணம் ரத்து!

  • March 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எரிபொருள் ஏற்றி வர வேண்டிய ஆறு எண்ணெய் கப்பல்களின் பயணம் தடைபட்டுள்ளதால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் விநியோக மாற்றங்களால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவிடம் தற்போது போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவர் கேட்டுக்கொண்டார். பயணத்தை இரத்து செய்த கப்பல்களுக்குப் பதிலாக மாற்று வழிகளில் எண்ணெயைப் பெறுவதற்கான […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தென் பகுதியை பதம் பார்த்த ஈரான் ஏவுகணை!

  • March 22, 2026
  • 0 Comments

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தென் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்ததால், ஆரத் Arad நகரை ஏவுகணைத் தாக்கியுள்ளது. இதில் சுமார் 88 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள டிமோனா Dimona நகரிலும் மேற்படி தாக்குதலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, ஈரானில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன தாக்குதல் நடத்தியுள்ளது.

இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் தொட்டது எரிபொருள் விலை!

  • March 21, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றறொன்றின் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு […]

உலகம் செய்தி

ஈரானின் 8,000 இலக்குகள்மீது தாக்குதல்: 130 கப்பல்கள் அழிப்பு!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரானின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு மையங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அந்நாட்டின் போர் ஆற்றல் குறைந்துவருகின்றது என அமெரிக்கா கருதுகின்றது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் விடுத்து வந்த அச்சுறுத்தல்கள் குறைந்துள்ளது என அமெரிக்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஏவுகணை ரேடார் நிலையங்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவு தளங்களை அழித்ததன் மூலம் ஈரானின் கடற்படை கண்காணிப்புத் திறன் பலவீனமடைந்துள்ளது. இதுவரை சுமார் 8 ஆயிரம் இலக்குகள் மற்றும் 130 ஈரானியக் கப்பல்கள் […]

உலகம் செய்தி

அடுத்து வரும் நாட்களில் உக்கிர தாக்குதல்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • March 21, 2026
  • 0 Comments

ஈரான்மீதான தாக்குதல் அடுத்துவரும் நாட்களில் உக்கிரமடையும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். மத்திய கிழக்கு போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையிலேயே இஸ்ரேல் தரப்பில் இருந்து மேற்கண்டவாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டன் – அமெரிக்க கூட்டுத் தளத்தின் மீது ஈரான் […]

error: Content is protected !!