Hezbollah அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு!
ஹிஸ்புல்லா Hezbollah அமைப்பை குறிவைத்து லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இவ்வாறு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேல், தற்போது அவ்வமைப்பின் உட்கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைத் தடுக்க லிட்டானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களைத் தகர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர […]













