பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
வெறுப்பு பேச்சுக்களை வெளியிடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் இன்று (23) போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். “ நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் பிரமுகர்களுக்கு உள்ளது. எனினும், பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து […]













