உலகம் செய்தி

போர் முடிவுக்குவர வேண்டும்: EU தலைவர் வலியுறுத்து!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, வலியுறுத்தியுள்ளார். இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்கான பணிகளில் சில ஐரோப்பிய நாடுகள் ஈடுபடத் தயாராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். எரிபொருள் […]

உலகம் செய்தி

பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துகிறது பிரிட்டன்!

  • March 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக Cyprus தீவில் வான்வெளி பாதுகாப்பை உறுதிப்படுத்த HMS Dragon எனும் போர்க்கப்பல் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. அத்துடன், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வழங்கி […]

உலகம் செய்தி

‘5 நாள் போர் நிறுத்தம்’ – இஸ்ரேல் கூறுவது என்ன?

  • March 24, 2026
  • 0 Comments

“ஈரானுடனான புதிய உடன்படிக்கை மூலம் போரின் நோக்கங்களை அடைவதற்கும், பிராந்தியத்தில் தமது முக்கிய நலன்களைப் பாதுகாக்கவும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் Donald Trump கருதுகின்றார்.” இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்தார். ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். தமது நாட்டுடன் ஈரான் பேச்சு நடத்திவருகின்றது எனவும் அவர் கூறினார். எனினும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. […]

இலங்கை செய்தி

வலுசக்தி பயன்பாடு குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

  • March 23, 2026
  • 0 Comments

“நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு தோள்கொடுக்க ஈரான் எப்போதும் தயார்!

  • March 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஈரான் தயாராகவே இருக்கின்றது என்று அந்நாட்டு தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பிராந்திய நிகழ்வுகளால் தேவையான எண்ணெயைப் பெறுவதில் இலங்கை சிரமங்களை எதிர்கொண்டால், ஈரான் தேவையான அனைத்துப் பொருட்களையும் வழங்கும். ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை, மேலும் நாங்கள் இலங்கைக்கு தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருக்கிறோம். […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவில்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி கூறுவதுபோல இரு நாடுகளுக்கும் இடையில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. போரின் மூலம் தான் அடைய நினைக்கும் இலக்குகளை எட்டும் வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று அறிவித்தார். இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என சர்வதேச […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு நேசக்கரம் நீட்ட ஆஸ்திரேலியா தயார்!

  • March 23, 2026
  • 0 Comments

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் […]

AI இலங்கை செய்தி

அரசியல் தீர்வு திட்டம்: தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க ஆயர் மன்றம் வியூகம்!

  • March 23, 2026
  • 0 Comments

தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்காக, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையில் இறங்குவதற்கு வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் பங்கேற்ற வடகிழக்கு ஆயர் மன்றத்தின் விசேட அமர்வு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தின் கடந்த காலச் […]

இலங்கை செய்தி

அடையாள அட்டையின்றி கடைக்கு வந்தவரை கைது செய்த பொலிஸார்: யாழில் நடந்தது என்ன?

  • March 23, 2026
  • 0 Comments

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என்பதற்காக குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கைதானவரிடம் இருந்து கைரேகைகள் பெறப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். எதற்காக தனது கைரேகை பதிவு செய்யப்பட்டது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தான் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தை தனது குடும்பத்தாருக்கு தெரியப்படுத்துவதற்குகூட அவருக்கு அனுமதி வழங்காது கையடக்க தொலைபேசியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர் வீட்டில் […]

உலகம் செய்தி

ஹர்முஸ் நீரிணை: ஈரான் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா பகுதி முழுவதும் முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அனைத்து கடல்சார் போக்குவரத்து வழிகளும் துண்டிக்கப்பட்டு, பிராந்தியம் முழுவதும் போக்குவரத்து முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய மோதல் […]

error: Content is protected !!