உலகம் செய்தி

தோல்வியை உடன்படிக்கையாக சித்தரிக்க ட்ரம்ப் முயற்சி: ஈரான் ராணுவம் பதிலடி!

  • March 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் ராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது தோல்விகளை ஒரு உடன்படிக்கையாகச் சித்தரிக்க முற்படுகின்றது என ஈரானின் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பாகரி Ebrahim Zolfaghari தெரிவித்தார். ஈரானிய மக்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் அமெரிக்காவின் எண்ணத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் வரை எந்தவொரு சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதையச் சூழலில் மட்டுமல்லாது, வருங்காலத்திலும் அமெரிக்காவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பலுக்கு இராஜதந்திர அழைப்பை விடுத்ததா இலங்கை?

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி விடுத்த கனிவான மற்றும் வாய்மொழி அழைப்பைத் தவிர, […]

உலகம் செய்தி

‘எரிபொருள் நெருக்கடி’- விமான சேவையை நிறுத்தியது Jetstar

  • March 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், Jetstar நிறுவனம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான பல விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. மே மாதத்தில் சுமார் 12 சதவீத விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறி மன்னிப்புக் கோரியுள்ளது. பொருளாதாரச் சுமை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வியட்நாம் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களது உள்நாட்டுச் சேவைகளைக் குறைத்துள்ளன. உலகளாவிய […]

உலகம் செய்தி

போரில் வென்றுவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

  • March 25, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதை மறுத்துள்ள ஈரான், தங்களுக்கு அணு ஆயுதக் கொள்கை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. அதேபோல போர் நிறுத்தம் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா உலகம் செய்தி

ஜனாதிபதி ட்ரம்ப், பிரதமர் மோடி பேச்சு: அமைதி முயற்சி குறித்தும் ஆராய்வு!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் இந்திய பிரதமர் Narendra Modi ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தொலைபேசி ஊடாகவே இன்று (24) இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணித்து, அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை பாதுகாப்பாகவும் தடையின்றியும் பராமரிக்க வேண்டியதன் அவசியத்துவம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பிராந்திய அமைதியை நிலைநாட்ட இரு […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி!

  • March 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) இச்சந்திப்பு நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் […]

இலங்கை செய்தி

அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!

  • March 24, 2026
  • 0 Comments

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறுகோரி மலையக சிவில் அமைப்பு பிரதிநிதிகளால் ICCPR சட்டம் (2007, இல. 56) கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேச வாதத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் […]

இலங்கை செய்தி

ஈரானில் புதிய தேசிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்!

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காதர் Mohammad Bagher Zolghar நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை வகித்த அலி லாரிஜானி Ali Larijani கடந்த 17 ஆம் திகதி போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் இந்த புதிய நியமனம் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்கும் சொல்காதர், இதற்கு முன்பு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் நீதித்துறையில் உயர்மட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். […]

இலங்கை கல்வி

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்குகிறது ADB!

  • March 24, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலர்களை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கண்டா (Masato Kanda) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை […]

உலகம் செய்தி

“எரிசக்தி நெருக்கடி”: பிரித்தானிய அமைச்சரின் மாற்று யோசனை!

  • March 24, 2026
  • 0 Comments

தற்போதைய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க பெட்ரோலியப் பொருட்களைச் சார்ந்து இருப்பதை விட தூய்மையான எரிசக்திக்கு மாறுவதே சிறந்தது என்று எரிசக்தி அமைச்சர் Michael Shanks தெரிவித்தார். வீடுகளின் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நீண்ட காலப் பாதுகாப்பிற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களே சரியான தீர்வாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் கட்டப்படும் அனைத்து புதிய வீடுகளிலும் சூரிய ஆற்றல் தகடுகள் மற்றும் வெப்ப ஏற்றிகள் பொருத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. […]

error: Content is protected !!