விளையாட்டு

ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக்கிண்ண தொடருக்குள் காலடி வைக்குமா இலங்கை?

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதி T20 சர்வதேச கிரிக்கெட் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (03) நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், T20 தொடரையும் ஏற்கனவே வென்று தொடரை தன் வசமாக்கியுள்ளது. இதனால், […]

விளையாட்டு

மீண்டெழுமா இலங்கை அணி? 2ஆவது T-20 போட்டி நாளை!

  • January 31, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka மற்றும் இங்கிலாந்து England அணிகளுக்கிடையிலான 2ஆவது T-20 போட்டி நாளை (01) நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் Pallekele International Stadium இலங்கை நேரப்படி போட்டி 7 PM மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் ODI தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் T-20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது. மழை காரணமாக […]

விளையாட்டு

ஆட்டம் ஆரம்பம்: களத்தடுப்பை தேர்வு செய்தது இங்கிலாந்து! (Update)

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.40 மணிக்கு ஆரம்பமானது. மழை காரணமாக தாமதித்தே போட்டி ஆரம்பமானது. இதனால் 17 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.   ………… முதலாம் இணைப்பு இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் முதல் ஆட்டம், கண்டி -பல்லேகல […]

விளையாட்டு

பழி தீர்க்குமா இலங்கை? 30 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • January 28, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளது. கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகின்றது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி […]

அரசியல் இலங்கை செய்தி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த கையோடு நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

தனக்கு எதிராக எதிரணிகளால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “ இப்பிரேரணைமூலம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மேலும் வாய்ப்பு கிட்டும்.” – என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு இன்று (08) விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ள கல்வி விவகாரம் தொடர்பில் பிரதமர் […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்ற ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார் அநுர!

  • January 1, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று மக்களிடம் நலன் விசாரித்தார். அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]

error: Content is protected !!