அரசியல் இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு : எதிரணி போர்க்கொடி!

  • February 6, 2026
  • 0 Comments

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை Emergency Law மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி SJP கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்டார். அவசரகாலச் சட்டத்தை இந்த அரசாங்கம் ஒடுக்குமுறைக்காக பயன்படுத்துகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எனவே, அச்சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் […]

இலங்கை செய்தி

டித்வா புயல்: சர்வதேச கொடையாளர் மாநாடு இழுபறியில்!

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 2026 ஜனவரி மாதம் குறித்த மாநாடு நடத்தப்படும் என 2025 இறுதியில் அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதமானது மீள் கட்டமைப்பு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா உதவும்: தூதுவர் உறுதி!

  • January 23, 2026
  • 0 Comments

“ டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும்.” இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் Qi Zhenhong உறுதியளித்துள்ளார். கண்டிக்கு நேற்று (23) பயணம் மேற்கொண்ட சீனத் தூதுவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். “ இலங்கையும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். எனவே, இலங்கைக்கு உதவி வேண்டியது சீனாவின் கடமையாகும். இலங்கையில் […]

இலங்கை செய்தி

டித்வா புயல் குறித்து சபையில் இன்று விவாதம்!

  • January 21, 2026
  • 0 Comments

டித்வா ditwah புயல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதம் நடைபெறவுள்ளது. இதற்குரிய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது. டித்வா புயலை எதிர்கொள்வதற்கு முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரப்பட்டது. அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் மேற்படி குழு நாடாளுமன்றத்துக்கு பிரேரிக்க வேண்டும். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!

  • January 16, 2026
  • 0 Comments

டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

தடைகளைத் தகர்த்தெறிந்து இலக்கை அடைவோம்: ஜனாதிபதி முன்னிலையில் சந்திரசேகர் சூளுரை!

  • January 15, 2026
  • 0 Comments

“நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது எத்தடை வரினும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். யாழில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையில் டித்வா புயலால் 400 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். சிலர் காணாமல் போனார்கள். அதுமட்டுமல்ல முழு நாடும் ஸ்தம்பிதமடைந்தது. […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் 55 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். “அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31 ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி கூறினார். டித்வா […]

இலங்கை செய்தி

பேரிடரால் வீடுகளை இழந்தோருக்கு வீடு அமைக்கும் பணி நாளை ஆரம்பம்!

  • January 8, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகின்றது. ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். இதற்கமைய டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு சஜித் மீண்டும் வலியுறுத்து!

  • January 7, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விரைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இழப்பு பெரும் இழப்பாகும். மிகப்பெரிய நிதி இழப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. அரச தரப்பில் இருக்கும் பலர் என்ன விடயங்களைச் சொன்னாலும், இந்த இழப்பை எதிர்கொண்டு, அதைத் […]

அரசியல் இலங்கை செய்தி

“புத்தாண்டில் புதிய அமைச்சை கோருகிறார் சஜித்”

  • January 1, 2026
  • 0 Comments

“இவ்வருடத்திலாவது இடர் முகாமைத்துவ விடயத்தை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றி, இதன் கீழ் புதிய நிறுவனங்களை ஸ்தாபிக்க வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (01) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு நடந்த துயர் மிகு நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் […]

error: Content is protected !!