இலங்கை செய்தி

இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் – டுபாயில் நிர்க்கதி

இஸ்ரேல் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு டுபாயில் நிர்க்கதியாகியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.

இந்த நிலையில் Fly Dubai விமானம் ஒன்றில், இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழு டுபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளது.

இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த தகவலையடுத்து, சில இலங்கையர்களுடன் விமானம் டுபாய்க்கு திருப்பி விடப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிராந்தியத்தில் விமான தாமதங்கள் இருப்பதாகவும், விமான அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர் இலங்கை நாட்டு பயணிகளிடம் கோரியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!