பொழுதுபோக்கு

“நாங்கள் மீண்டும் இணைகிறோம்…” ரஜினி, கமல் தரமான சம்பவம்

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது.

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நடிகர் கமல் பேசும்போது தான் சூப்பர்ஸ்டார் உடன் இணைவதை உறுதி செய்து இருக்கிறார்.

அது தரமான சம்பவம் என சிலர் சொல்வது பற்றி பேசிய கமல் “படம் கொடுக்கிறோம், அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். அதற்கு முன்பே தரமான சம்பவம் என சொன்னால் எப்படி. திடீர்னு தரதரனு கூட இழுத்துடுவோம்.”

“உங்களுக்கு படம் பிடித்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம்” என கமல் கூறி இருக்கிறார்.

நாங்கள் இணைகிறோம். எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியது தான். ஆனால் எங்களுக்கு அது போட்டி கிடையாது எனவும் கமல் தெரிவித்து இருக்கிறார்.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்