பொழுதுபோக்கு

‘சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது” அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

சூர்யாவின் வாழ்க்கை குறித்து அஜித்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொடுத்திருக்கும் பேட்டி எல்லோரையுமே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

சமீபத்தில் ஞானவேல் ராஜா கொளுத்தி போட்ட விஷயம் பெரிய அளவில் பூதாகரமாக மாறி சிவக்குமார் குடும்பத்தையே உலுக்கி விட்டது.

ஏற்கனவே நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடி போனது தமிழ் சினிமா ரசிகர்களிடையே சர்ச்சை கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. தற்போது இந்த பிரச்சனையும் அதோடு சேர்ந்து விட்டது.

பல வருடங்களாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் பிருத்விராஜ். இவரை பப்லு என்றும் அழைப்பார்கள்.

சமீபத்தில் ரிலீசாகி இருக்கும் பான் இந்தியா படமான அனிமல் படத்தில் முக்கிய ரோலில் இவர் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார் பப்லு.

இந்த பேட்டியில் சூர்யாவை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் சொன்ன பிரித்விராஜ் சூர்யா மிகவும் பயங்கரமான மனிதர். அது மட்டுமல்லாமல் அவர் மற்றவர்களை பற்றி யோசிக்கவே மாட்டார். தனக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் அவர் செய்வார் என சொல்லி இருக்கிறார். இதற்கு செல்ஃப் சென்டர் பர்சன் என்னும் வார்த்தையையும் உபயோகப்படுத்தி இருக்கிறார்.

சூர்யாவுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை, அவர் பீல்டு அவுட் நடிகர் என்றும் பிரித்விராஜ் சொல்லி இருக்கிறார். நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என்று அவர் சொல்லியிருக்கும் கருத்து எல்லோருக்குமே அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

எதற்காக இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், இவர்கள் இருவருக்கும் இதற்கு முன்பு ஏதாவது சொந்த பிரச்சினை இருந்ததா என்று சரியாக தெரியவில்லை.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!