இலங்கை செய்தி

ரணிலுக்கு கேஸ் சிலிண்டர், அரியநேத்திரனுக்கு சங்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள ப.அரியநேத்திரனுக்கான தேர்தல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற “சின்னம் சங்கு” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு ​​சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (15) வேட்புமனுவை சமர்ப்பித்த 39 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!